டைட்டில் வின்னரை தீர்மானிக்கும் இறுதி மேடை... கலக்கலாக தயாராகும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் இறுதி மேடைக்கு போட்டியாளர்கள் தயாராகுவதை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
தயாராகும் போட்டியாளர்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், நாளைய தினம் டைட்டில் வின்னர் யார் என்பதனை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் இன்றைய தினம் காலையில் வெளியேறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இறுதி போட்டிக்கு பிக்பாஸ் டாப் 5 போட்டியாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |