சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அதிரடி என்ட்ரி கொடுத்த பிரியங்கா...யாருடன் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள பிரியங்காவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக பிரியங்கா வளம் வருகின்றார்.
பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போது பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தாலும் மக்கள் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஆனல், பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.