பார்வதியின் தலையில் வைக்கப்பட்ட கிரீடம்! அடுத்தடுத்து மக்கள் கொடுத்த வரவேற்பு
பிக்பாஸில் கலந்து கொண்டு ரெட்கார்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்த பார்வதிக்கு ரசிகர்கள் அடுத்தடுத்து அதிரடியாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் பார்வதி. இவரது தைரியமான பேச்சு, துடுக்கான சண்டை என அனைத்தும் ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடித்திருந்தது.
விஜய் சேதுபதியும் இவரை பலமுறை கண்டித்தாலும், அதிகமான முறையில் இவரை பாராட்டவும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறியது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் அருமையாக விளையாடிய இவர்கள் இறுதியாக நிகழ்ச்சி முடிவதற்கு ஒரு சில நாட்கள் இருந்த நிலையில் ரெட் கார்டு பெற்று வெளியேறினர்.
பின்பு இவருக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு நியாயமில்லாத ஒன்று கூறப்பட்டிருந்த நிலையில், பினாலே அன்று பார்வதியை மேடைக்கு அழைத்து விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது பார்வதிக்கு நாளுக்குநாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் அவருக்கு கொடுத்த வரவேற்பினை தனது இன்ஸ்டாவில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |