தற்கொலை செய்து நிரூபிப்பேன்... மீரா மிதுன் பதிவிட்ட பரபரப்பு டுவிட்
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை ட்விட்டர் பதிவில் டேக் செய்து தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக பிக் பாஸ் மீரா மீதுன் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சூப்பர் மாடல் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கு நன்கு அறிமுகமானார். அந்நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மற்றும் இவருக்கு ஏற்பட்ட மோதலினால் பிரபலமானார்.
அதன்பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கி சற்று ஒய்ந்திருந்த மீரா, தற்போது மீண்டும் தனது வளர்ச்சியை கண்டு பலர் பொறாமைப்படுவதாகவும், அதனால் தனது வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பதாகவும் கூறி வருவார்.
இப்பொழுதும் அஜித் ரவி என்பவர் தனது பெயரை கெடுத்து தன்னை வளரவிடாமல் துன்புறுத்துவதாக பதிவுவிட்டுள்ளார்.
மேலும், இன்னொரு பதிவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து, “இது பெண்ணுக்கு எதிரான வன்முறை. இதை ஆண்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நான் இறந்து நான் என்னை நிரூபித்து வெற்றி பெறுவேன்.
ஏனென்றால் அதற்கு மேல் என்னை துன்புறுத்தி அவர்களால் மகிழ முடியாது. அவர்கள் தோற்றுவிடுவார்கள். நான் பெருமையோடு சாவேன். ஒரு தமிழச்சி அதை நிச்சயம் செய்வாள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “நான் இறந்த பின்னர் அவர்களை கைது செய்து தண்டியுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
It's woman harassment which yu men @mkstalin @narendramodi can never understand. I die and I show I win, because they can't have fun anymore torturing a woman's life , they lose. I die with pride and a tamilian will do tat .
— Meera Mitun (@meera_mitun) June 16, 2021
Once I die, arrest these ppl n punish pic.twitter.com/qnQo3yxYoB