இறுதியாக மேடையில் ரகளை செய்த பிரஜன்.. லட்சங்களை சம்பளம் கொடுத்த பிக்பாஸ் 9- எவ்வளவு?
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வந்த நடிகர் பிரஜன், பிக்பாஸ் சீசன் 9-ல் பங்கேற்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஏழு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
லட்சங்களில் சம்பளம் வாங்கிய பிரஜன்
இந்த நிலையில் எட்டாவது வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
வாக்குகள் அடிப்படையில், பிரஜன், சாண்ட்ரா இருவரும் குறைவான வாக்குக்களை பெற்று வெளியேற இருந்த நிலையில் பிரஜன் எவி்க்ட் செய்யப்பட்டுள்ளார். வெளியில் வந்த பிரஜன், மேடையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாண்ட்ராவிற்கு கொடுத்த அலப்பறைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வந்த பிரஜன் சுமாராக 44 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடியிருந்தார். அவருக்கு வாரத்திற்கு 1 துவக்கம் 2 லட்சங்கள் வரை சம்பளம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த தகவல்படி பார்க்கும் பொழுது, 6 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி பிரஜன் லட்சங்களில் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “ இனி தான் சாண்ட்ரா விளையாடுவார்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |