Bigg Boss 9: திவாகரனை எட்டி உதைத்த பார்வதி.. நடிப்பு அரக்கன் பட்டம் கொடுத்தது யாருக்கு?
பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் திவாகரனை பார்வதி எட்டி உதைக்கும் காட்சியை இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
நேற்றுமுன் தினம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
எட்டி உதைத்த பார்வதி
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் திவாகரன் செய்யும் அலப்பறைகளை வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவர் வெளியில் தன்னை தானே விளம்படுத்திக் கொண்டது போன்று உள்ளே சென்றும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய தினம் வெளியான முதல் காணொளியில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கிற்கு பார்வதி திவாகரனை எட்டி உதைத்துள்ளார். அத்துடன் விக்கல்ஸ் விக்ரமின் நடிப்பு பிக்பாஸ் போட்டியாளர்களை கவர்ந்துள்ளது.
இப்படி சண்டை முற்றி போனால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |