Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக?
“ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது..” என ஆதிரை விஜய்சேதுபதி கடிந்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
ஆதிரையை வெளுத்து வாங்கிய சேதுபதி
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் என்பதால் வீட்டில் தெனாவட்டுடன் அழைந்துக் கொண்டிருந்த போட்டியாளர்களை விஜய் சேதுபதி வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்கள் எழுந்து நின்று அவர்களின் பெயர்களை கூற ஆதிரை மாத்திரம் அமர்ந்த இடத்தில் இருந்து பெயரை கூறுகிறார்.
இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, “ உங்களுக்கு எழுந்து பெயர் கூற முடியாதா? ஒங்க விருப்பத்திற்கு இருக்க இந்த இடம் இல்லை. பிரச்சினைகளை சொந்த பிரச்சினையாக எடுத்துக் கொண்டால் நிம்மதி இருக்காது..” என பேசுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |