ஆட்டத்திற்கு முடிவுக்கட்டிய வொர்ட்டிங்.. இந்த வாரம் பெட்டியை தூக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் இருவர் இந்த வாரம் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படவுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஏழு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
இந்த வாரம் வெளியேற்றம் உறுதி
இந்த நிலையில் ஏழாவது வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்த சமயத்தில் எவிக்ஷன் நடக்காது என விஜய் சேதுபதி கூறி விட்டார்.
அதன் பின்னர் வைல்ட் கார்ட் மூலம் ஆதிரை மீண்டும் உள்ளே அனுப்பட்டார். அப்போது குறைவான வாக்குக்களை பெற்ற வியானா, Fj உடன் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதங்களை கடந்த தினங்களில் பிக்பாஸ் கண்டித்துள்ளார். அத்துடன் பார்வதி- கம்ருதீன் நடந்து கொண்ட விதம் மற்றும் ஒழுக்கத்தையும் எச்சரிக்கும் வகையில் பிக்பாஸ் அனைவர் முன்பும் பேசியிருந்தார்.
இதற்கிடையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என விஜய் சேதுபதி கடந்த வாரம் கூறினார்.
இதன்படி, பார்க்கையில், அமித் மற்றும் கனி இருவரும் குறைவான வாக்குகள் பெற்று வொர்ட்டிங்கில் கடைசியாக இருக்கிறார்கள். வெளியேறினால் இவர்கள் தான் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |