பிக்பாஸ் வீட்டில் நடக்கப்போகும் எவிக்ஷன்.. ரெட்கார்ட் கொடுக்கப்படுமா? கொந்தளிக்கும் மக்கள்
பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுடன் நடந்து கொள்ளும் வித இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 10 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
ரெட்கார்ட் உறுதி
இந்த நிலையில் பத்தாவது வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
வாக்குகள் அடிப்படையில், பிரஜன், சாண்ட்ரா இருவரும் குறைவான வாக்குக்களை பெற்று வெளியேற இருந்த நிலையில் பிரஜன் எவி்க்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமமாக இருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியேறுவதாக கூறி, பின்னர் மாற்றி பேசிய ரம்யா குறைவான வாக்குகளை பெற்று கடைசியில் இருக்கிறார். அதன் பின்னர் Fj உடன் இணைந்து காதல் சர்ச்சையில் சிக்கிய வியானாவும் கடைசியாக இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்கையில், இன்றைய தினம் Fj மற்றும் கம்ருதீன் இருவருக்கும் இடையில் பயங்கரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அதில் இருவரும் சரமாறிய கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டனர். கம்ருதீன் சண்டை போட்டது மட்டுமல்லாமல் பார்வதியுடன் ரகசியமாக மறைய முயற்சிக்கும் பொழுது பிக்பாஸ் அவர்களை சத்தமாக அழைத்து வெளியில் வர வைத்தார்.
இது போன்ற பல குறும்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் போராட்டம் செய்தார்கள். ஆனாலும் பார்வதி, கம்ருதீன் இருவரும் நிறுத்துவதாக இல்லை. சில சமயங்களில் இந்தவாரம் கம்ருதீன் வெளியேற்றப்படலாம். ரெட் கார்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருத்துக்களை வாரி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |