சபரி தோல்வியை கொண்டாடிய பார்வதி.. நாமினேஷன் Free யாருக்கு?
மாஸ்க் எடுத்து வைக்கும் டாஸ்க்கில் சபரி தோல்வியடைந்ததும் பார்வதி கத்திக் கொண்டாடிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி தமிழில் அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
பார்வதியின் மோசமான செயல்
இந்த நிலையில், மாஸ்க் எடுத்து பெட்டிக்குள் வைக்கும் டாஸ்க்கில் சபரி, துஷார், கம்ருதின் ஆகியோர் கடைசியாக விளையாடி வந்தார்கள். இவர்களில் சபரி தோல்வியடைகிறார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் சபரி தோல்வியை கத்திக் கொண்டாடிய ஒரே போட்டியாளர் பார்வதி தான். சபரி தோல்வி என பிக்பாஸ் சொன்னவுடன் கத்திக் கூச்சல் போட்டுள்ளதுடன் துள்ளிக்குதித்து ஆட்டமும் போடுகிறார்.
இறுதி போட்டியில் துஷார், கம்ருதின் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இவர்களில் வெற்றிப் பெறும் போட்டியாளருக்கு நாமினேஷன் Free கிடைக்கும் என பிக்பாஸ் கூறியுள்ளார். அப்படியாயின், வெற்றிப் பெறுபவர் யார் என்பதை காண பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |