நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பார்வதி- சபரி- நடுவில் நீதிபதியான திவாகரன்- சூடுபிடிக்கும் பிக்பாஸ்
மாஸ்க் எடுத்து பெட்டிக்குள் வைக்கும் டாஸ்க்கில் நேருக்கு நேர் பார்வதியும் சபரியும் மோதிக் கொள்ளும் பொழுது, அவர்களை தூண்டு விடும் விதமாக நடுவில் திவாகரன் பஞ்சாயத்து செய்கிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
டாஸ்க் நடுவே சுருண்டு விழுந்த பிரபலம்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இஷ்டத்திற்கு விளையாடிய போட்டியாளர்களை விஜய் சேதுபதி கடந்த வாரம் வறுத்தெடுத்திருப்பார். வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, மாஸ்க்கை எடுத்து உரிய பெட்டியில் வைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் வேகமாக ஓடிய சபரி, பார்வதியின் முகம் உள்ள மாஸ்க்கை எடுத்து பெட்டிக்குள் வைக்கிறார். இதனை கவனித்த பார்வதி, “ ஏன் வேகமாக ஓடிப் போய் என்னுடைய மாஸ்க்கை எடுக்கிறீங்க.. இது உங்களுக்கு தனிப்பட்ட கோபம்..” என்கிறார். இவர்களை தூண்டி விடும் விதமாக நடுவில் வந்த திவாகரன், “ ஆமாம், இது உங்களுடைய தனிப்பட்ட கோபம்..” என சத்தமாக பேசுகிறார்.
இப்படி இன்றைய நாளுக்கான முதல் சண்டை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |