கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜாவின் உறவினர் உடைத்த உண்மை
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடைசி நாட்களில் கடனை அடைக்கமுடியாமல் கஷ்டப்பட்டதாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் சமீபத்தில் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனையுடன் கொண்டு வந்தவர் ஆவார்.
சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர் சமீபத்தில் காலமான நிலையில், இறுதி சடங்கின் போது சொத்துக்காக சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அண்ணன் இறக்கும் முன்பு சொத்துக்களை மனைவி, மகள், மருமகள் என சமபங்காக பிரித்து கொடுத்துவிட்டார் என்று விளக்கம் அளித்திருந்தார்.

கடன் அடைக்க முடியாத வருத்தம்
இந்நிலையில் பாரதிராஜாவின் உறவினரும், இயக்குனருமான மனோஜ்குமார் சில விஷயங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பேட்டியில், கங்கை அமரன் எல்லாரும் விட்டுட்டு போய்ட்டீங்களே என்று கேட்டார். ஆனால் அவரிடம் எடுத்துக் கூறினோம். மேலும் பாரதி ராஜாவிடமும் ராதிகா வந்ததையும், அவருக்கு விருது கிடைக்கும் என்று கூறியதையும் நினைவு கூறினோம்.
ஆனால் அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தன்னுடைய கடன்களை அடைப்பதற்கு தன்னை மீறி யாரும் ஒத்துழைக்கவில்லையே என்று தோன்றியது. ஏனெனில் அவர் ராஜா மாதிரி வாழ்ந்தவர் என்று கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |