எல்லை மீறும் பாரதி... ஆட்டத்தை ஆரபித்த வில்லி! கண்ணீருடன் வெளியேறிய கண்ணம்மா
பாரதி கண்ணம்மாவில் இன்று லக்ஷ்மியை கூட்டி செல்ல மீண்டும் வருகிறார் கண்ணம்மா, ஆனால் பாரதி அவரை திருப்பி அனுப்புகிறார்.
லக்ஷ்மி தன்னுடைய மகள் தான் என கண்ணம்மா வாயால் உண்மையை சொல்ல வைக்க பாரதி தொடர்ந்து அவரை பல்வேறு விதங்களில் சீண்டிக்கொண்டே இருக்கிறார்.
இந்த பிரச்சனை எப்படி தான் முடியும்? கண்ணம்மா மீண்டும் பாரதியின் வீட்டுக்கு வருகிறார். அப்போது அத்தை சௌந்தர்யா மட்டுமே வீட்டில் இருக்கிறார்.
லக்ஷ்மியை விட்டு ஒரு நாள் கூட பிரிந்ததில்லை, அவளை என்னுடன் அனுப்புங்கள் என கேட்கிறார்.
அப்பா அம்மா வந்தால் தான் அனுப்புவேன் எனசொல்கிறார் . அப்படி என்றால் நான் அம்மா, அவர் தான் அப்பா என சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா என கேட்கிறார் கண்ணம்மா.
சௌந்தர்யா கண்ணம்மாவின் வருத்தத்தை புரிந்துகொண்டு லட்சுமியை அனுப்ப முடிவு செய்கிறார். பாரதி கேட்டால் நான் பார்த்துக்கொள்கிறேன் எனவும் கூறுகிறார் அவர். அந்த நேரம் பார்த்து பாரதி சரியாக வீட்டுக்கு வருகிறார்.
சமையல் அம்மா என்ன இந்த பக்கம் வந்திருக்கிறார் என நக்கலாக கேட்கிறார். அதன் பின் அவரை கிளம்பவும் சொல்கிறார். கண்ணம்மா வேறு வழியின்றி கிளம்புகிறார். அவரை தடுத்து நிறுத்தி லக்ஷ்மியை பார்த்து விட்டு போகும்படி கூறுகிறார்.
லட்சுமி வந்து அவரை அம்மா என அழைக்க முற்பட்டு அதன் பின் சமையல் அம்மா என கூப்பிடுகிறார். குழந்தையை இப்படி பொய் சொல்ல பழகியிருக்கிறாளே என கண்ணம்மா மீது தான் அவருக்கு கோபம் வருகிறது.
என்னை கூட்டி செல்வதற்காக தான் வந்தியா என கூறி லட்சுமி அப்போதே கிளம்ப பார்க்கிறார். ஆனால் பாரதி அதை தடுத்து மீண்டும் அவளை அனுப்ப முடியாது என கூறுகிறார்.
அதன் பிறகு பாரதி இந்த விஷயம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது லட்சுமி வந்து அவரை சாப்பிட அழைக்கிறார். ஆனால் பாரதி கோபமாக அவரை திட்டிவிடுகிறார்.
கண்ணம்மா செய்த தவறுக்கு குழந்தையை இப்படி கோபமாக பேசுவிட்டோமே என பின்னர் வருத்தப்படுகிறார். அதன் பின் ஹேமா பாரதிக்கு போன் செய்து உங்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக கூறுகிறார்.
அதனால் அவர் உடனே பார்க்க வருவதாக சொல்கிறார். அஞ்சலிக்கு தவறான மாத்திரைகள் எழுதி தர திட்டம் போட்டிருக்கும் வெண்பா, அதை பாரதியின் prescription பேடில் எழுதி கொடுக்க முடிவெடுத்து, அதை திருட வருகிறார்.
பாரதியின் அறையில் இருந்து அதை கண்டுபிடித்து எடுத்து கொண்டு போகிறார். உன் வீட்டில் நீ மட்டும் தான் ஏமாளி என பார்த்தால் தற்போது அஞ்சலியும் தானாக வந்து என் வலையில் விழுகிறாள் என மனதிற்குள் நினைத்துகொள்ளகிறார் வெண்பா.
பிரசவத்தில் அஞ்சலி உயிர்பிழைத்தாலும் இந்த மாத்திரைகளை அவளது உயிரை எடுத்துவிடும் என திட்டம் போடுகிறார் அவர்.
ஒருவேளை சிக்கினால் கூட பாரதிக்கு தான் பிரச்சனை வரும் என மனதிற்குள் நினைத்து மகிழ்ச்சி ஆகிறார் அவர்.
இப்படி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவில் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.