மருத்துவமனைக்கு ஓடி வந்த கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்த தருணம்: வேற லெவல் ப்ரொமோ! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இதன் கதையினை நாளுக்கு நாள் விறுவிறுப்பாக இயக்குனர் எடுத்துச்செல்வதால் ரசிகர்களின் ஆர்வமும் துளிகூட குறையாமல் இருந்து வருகின்றது.
வில்லி வெண்பாவின் சதியால் பிரிந்து வாழும் பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் பாரதியின் தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, உடனே கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். இந்நிலையில் கண்ணம்மாவிற்கு மாமியார் போன் செய்து அழைத்துள்ளார்.
மருததுவமனைக்கு பதட்டத்துடன் வந்த கண்ணம்மா மற்றும் பாரதியிடம் சேர்ந்து வாழ்வேன் என்று சத்தியம் பண்ண கேட்கிறார் மாமனார். இந்நிலையில் இருவரும் என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரமும் பாரதி மனம் திருந்துவது போன்று காட்டப்பட்ட ப்ரொமோ காட்சி கடைசியில் நடிப்பாக சென்றதால், இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்ற இவ்வாறு செய்கின்றனர் என்று ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.