தனிமைப்படுத்தப்பட்ட நடிகர் பாக்யராஜ் குடும்பம்! கடும் சோகத்தில் மகன் விடுத்த கோரிக்கை
நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள், வேலை செய்கிறவர்கள் என அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருக்கும் சாந்தனு, கடந்த 10 தினங்கள் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது பெற்றோர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படியும் சாந்தனு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
My parents #KBhagyaraj #PoornimaBhagyaraj tested POSITIVE fr #Covid19 today.
— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 7, 2021
All of us incl. staff hve quarantined ourselves @ home as per our doctors instructions
Requesting everyone who were in contact with any of us last 10days to get tested
Pls pray fr their speedy recovery??