Kitchen tips : ஒரு வாரமானாலும் கொத்தமல்லி பச்சையாக இருக்கணுமா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Kitchen tips : இந்திய சமையலில் நல்ல மணத்தையும், தனித்துவமான சுவையையும் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நறுமணமிக்க மூலிகைகளில் ஒன்று தான் கொத்தமல்லி.
சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, சட்னி என பல்வேறு வகையான உணவுகளில் கொத்தமல்லி இலைகள் சேர்க்கப்படுகின்றன.

உணவின் சுவையை மட்டுமின்றி, அதன் மணத்தையும் அதிகரிப்பதால், பெரும்பாலான வீடுகளில் அன்றாட சமையலில் கொத்தமல்லிக்கு முக்கியத்துவம் உண்டு.
ஆனால், கொத்தமல்லியை வாங்கி வீட்டில் வைத்த பிறகு, அதை நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் பாதுகாப்பது சற்று சிரமமானதாக இருக்கிறது.

சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டால், சில நாட்களிலேயே கொத்தமல்லி இலைகள் வாடத் தொடங்கி, பச்சை நிறத்தை இழந்து, பின்னர் அழுகவும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் அசத்தல் டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
5 எளிய வழிகள்
1.கொத்தமல்லியை ஒரு வாரம் வரை பிரஷ்ஷாக வைத்திருக்க, முதலில் நல்ல பிரஷ்ஷான கட்டையாகப் பார்த்து வாங்குங்கள். வீட்டிற்கு வந்ததும் அழுகிய, நிறம் மாறிய இலைகள், தண்டுகள் மற்றும் வேர்ப்பகுதியை அகற்றிவிடுங்கள். ஈரமாக இருந்தால் துணியில் போட்டு நன்றாக உலர்த்திய பிறகே ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

2.கொத்தமல்லியை பூக்களைப் போலவும் சேமிக்கலாம். தண்டுகளின் அடிப்பகுதியை சிறிது வெட்டி, ஒரு கண்ணாடி ஜாரில் கால்வாசி அளவு தண்ணீர் ஊற்றி, தண்டுகள் மட்டும் தண்ணீரில் படும்படி வைக்கவும். இலைகள் மேலே இருக்க வேண்டும். ஜாரை கவரால் மூடி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம். தண்ணீரின் நிறம் மாறினால் உடனே மாற்றிவிடுங்கள்.
3.ஜாரில் சேமிப்பது பிடிக்கவில்லை என்றால், ஈரமில்லாத கொத்தமல்லியை பேப்பர் டவலில் சுற்றி ஒரு கவரில் போட்டு வைக்கலாம். பேப்பர் டவல் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும். அது ஈரமாகிவிட்டால், புதிய பேப்பர் டவலை மாற்றிவிடுங்கள்.

4.சேமித்து வைக்கும் முன் கொத்தமல்லியை கழுவுவதை முடிந்தவரை தவிர்க்கவும். அதிகப்படியான ஈரப்பதம் கொத்தமல்லி சீக்கிரம் அழுகுவதற்கு காரணமாகலாம். மண் அதிகமாக இருந்தால் மட்டும் கழுவி, நன்றாக உலர்த்திய பிறகு பேப்பர் டவலில் சுற்றி கவரில் சேமித்து வைக்கவும்.
5. எவ்வளவு சரியாக சேமித்தாலும், கொத்தமல்லியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம். ஒரு அழுகிய இலை இருந்தாலும், அது மற்ற இலைகளையும் விரைவாக பாதிக்கலாம். எனவே அழுகிய அல்லது பழுதான இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள். சுருக்கமாகச் சொன்னால், சரியான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றோட்டத்தைப் பராமரிப்பதே கொத்தமல்லியை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்திருக்க துணைப்புரியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |