சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெளியேறிய பென்னிக்கு மனைவி கொடுத்த ஷாக் பதில்! என்ன தெரியுமா?
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். 8-வது சீசனில் நடுவராக இருக்கும் ஒருவர் தான் பாடகர் பென்னி தயாள்.
ரொம்பவே சாஃப்ட்டா பேசக் கூடிய பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள். கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் காரணமாக ரசிகர்கள் பண்ண டார்ச்சரை பொறுக்க முடியாமல் இனிமேல் சூப்பர் சிங்கர் சீசன் 8 பற்றி ஒரு வார்த்தைக் கூட மூச் விடமாட்டேன் என்றும் அடுத்த சீசனில் யார் வந்து அழைத்தாலும் பங்கு பெற போவதில்லை என்கிற அதிரடி முடிவை அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
இதனால், இவரின் முடிவுக்கு பென்னி தயாளின் மனைவி, கேத்தரின் தங்கம் முழு ஆதரவையும் கொடுத்துள்ளார். மேலும், சூப்பர் சிங்கர் போன்ற ஒரு பெரிய மேடையை இப்படி உடனடியாக உதறித் தள்ளுவது என்பது பெரிய முடிவு உன்னை எண்ணி பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
மனதுக்கு தோன்றிய விஷயத்தை தான் நீங்கள் சொல்லி இருக்கீங்க... எந்த நேரத்திலும் உங்களுடன் துணை நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் டிவி ற்றும் சூப்பர் சிங்கர் குழுவினர் உள்ளிட்டோரும் இந்த விவகாரம் தொடர்பாக பாடகர் பென்னி தயாள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.