சனியின் வக்ர பெயர்ச்சி.. 3 ராசிக்கு ஏற்படப்போகும் விபரீத ராஜயோகம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் ஒவ்வொரு அசைவும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவான் ஏப்ரல் மாதம் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இந்த ராசி மாற்றம் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.
சனியின் வக்ர பெயர்ச்சியால் லருக்கு நல்ல பலனையும், சிலருக்கு அசுபத்தையும் ஏற்படுத்தும். எனவே சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார்.
அதன்படி, சனியின் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு எந்தவிதமான பாதிப்புகளை தருவார் என்பதை பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சனியின் வக்ர பெயர்ச்சி பல நன்மைகளை தரும். வேலை தேடுபவர்களுக்கு இது நல்ல நேரம். கடின உழைப்பின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு. சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இந்த சனியின் பெயர்ச்சியால் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியினர்களுக்கு சனியின் பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலையில் சில மாற்றங்களை செய்ய நினைத்தால், இதுவே சாதகமான நேரம்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு புதிய வேலையை தொடங்க நினைத்தால், இதுவே சாதகமான நேரம்,. பணியிடத்தில் உங்கள் செயல் வலுவாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி காணப்படுகிறது.