வாழைப்பழ தோலில் இவ்வளவு ஆரோக்கியமா? இனிமேல் தூக்கி வீசாதீங்க
வாழைப்பழ தோலை பயன்படுத்தி சருமம் மற்றும் பற்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள நிலையில், இதனை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் உள்ளது.
வாழைப்பழ தோலில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் பி 6 மற்றும் பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது.
தினமும் வாழைப்பழங்கள் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கவும், உடலின் அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யவும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ள நிலையில், இதன் தோலில் உள்ள சத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத் தோலின் நன்மைகள்
வாழைப்பழத் தோல் சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றுகின்றது.
வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து காயவைத்து பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வர முகம் பொலிவு பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது. மேலும் புதிய செல்களை புதுப்பிக்க உதவுகின்றது.
வாழைப்பழ தோலை கண்களுக்கு கீழ் தடவுவது கருவளையத்தை குறைக்க உதவுகின்றது. வறண்ட சருமப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கும் முன்பு வாழைப்பழ தோலை முகத்தில் தடவி படுக்க சென்று, காலையில் கழுவவும்.
இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருப்பதை உங்களால் உணர முடியும். வாழைப்பழ தோலை உதடுகளில் தடவினால், உதடு வெடிப்பு, உதட்டில் தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
வாழைப்பழ தோல்கள் சில பூச்சிக்கடி, தடிப்புகள் மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தலாம். அரிப்பு மற்றும் எரிச்சலை குறைப்பதுடன், பற்களில் தேய்த்து வந்தால் இயற்கையாகவே பற்கள் வெண்மையாகும்.
தோலில் உள்ள நார்களை வழித்தெடுத்து, உப்பு மற்றும் கிராம்பு ரேச்த்து பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறும்.
பழத்தோல்களை சேகரித்து நாம் செடிகள் அல்லது மரங்களுக்கு அடியில் போட்டு விட்டால் அது சிறந்த உரமாகவும் மாறுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கிறது.
வாழைப்பழ தோலை தண்ணீரில் கொதித்து வைத்து டீ போல அருந்தி வரலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நார்ச்சத்து மற்றும் மலச்சிக்கலை தடுக்கின்றது.
வாழைப்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதால், சுத்தமான நீரில் நன்கு கழுவ வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது மற்ற ரசாயனங்கள் தோலில் படிந்திருக்கலாம். அது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
