காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வெந்தயத்தினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நாம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள். வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை. வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது.
மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும். சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.
வெந்தயத்தை அரைத்து, குளிர்ந்த கடுகு எண்ணெய்யுடன் கலக்கவும். இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவினால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மயிர்க்காலின் வலிமையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.