மாதக்கணக்கில் போர்வையை துவைக்காமல் பயன்படுத்துபவரா நீங்கள்? பயங்கர ஆபத்தாம்
மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை போர்வையை துவைக்காமல் தொடர்ந்து தூங்கி வந்தால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, பருவகால நோய்கள், தூக்கமின்மை, பால்வினை நோய்கள், பிறப்புறுப்பு நோய்கள் போன்றவை ஏற்படலாம் என்றும் தெரியவருகிறது.
பெரும்பாலானோர் மாதக்கணக்கில் துவைக்காமல் போர்வைகளை உபயோகம் செய்து வரும் நிலையில், அதனால் முகப்பரு, தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்களுக்கு தெரியாத கிருமிகள் அழுக்கான போர்வையில் நிறைந்துள்ள காரணத்தால், மேற்கூறிய பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் போர்வைகளை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைத்து உபயோகம் செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுரை கூறுகின்றனர்.