திவாகருக்கு இப்படியொரு பிரச்சினையா? வெளியில் வந்த பிரவீன் உடைத்த ரகசியம்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக விளையாடிக் கொண்டிருக்கும் திவாகருக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக வெளியில் வந்த பிரவீன் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன், துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்துள்ளனர்.
திவாகரன் சாதாரண ஆள் அல்ல..
இந்த நிலையில், நான்காவது வாரமான டபுள் எவிக்ஷன் நடந்து பிரவீன் மற்றும் துஷார் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியே சென்ற துஷார் கொடுத்த பேட்டி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் பிரவீன் கொடுத்த பேட்டியில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் திவாகரனுக்கு ஒரு பிரச்சினை உள்ளது என தொகுப்பாளினி கேட்க அதற்கு பிரவீன், “ ஆமாம், திவாகரனுக்கு ரீல்ஸ் செய்வது போன்று ஏற்றத்தாழ்வு பார்ப்பதும் முக்கிய குறையாக உள்ளது. அவர் எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வு பார்ப்பார்.

ஒரு நாள் நாங்கள் பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பாடலில் வரும் அந்த வரியை கூட அவர் அவ்வளவு ரசிக்கிறார். இது குறித்து கடந்த வாரம் பேசப்பட்டது..” என பேசியிருந்தார்.
கோமாளி போன்று நடித்து மக்களை சிரிக்க வைக்கும் திவாகரனுக்குள் இப்படியொரு பக்கமாக என இணையவாசிகள் மிரண்டுபோயுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |