கொளுத்தி போட்ட பிக்பாஸ்.. பாருக்காக நிற்கும் திவாகர்.. இதுவும் கம்ருதீன் விளையாட்டா?
பார்வதியை கூறியதும் திவாகர், கம்ருதீனை ஆதங்கத்தில் திட்ட ஆரம்பிக்கும் பொழுது வீட்டிற்குள் பிரச்சினை வெடிக்க ஆரம்பிக்கிறது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.
சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.

அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
கொளுத்தி போட்ட பிக்பாஸ்
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் யார் இந்த வாரம் சரியாக விளையாடவில்லை என பிக்பாஸ் கொளுத்தி போடுகிறார்.
அதற்கு ஏற்றால் போன்று பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் அதிகமானவர்கள் பார்வதியை கூற, வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரன் மாத்திரம் கானா வினோத்தை கூறுகிறார்.

இதனை தொடர்ந்து, கம்ருதீன், “பார்வதியை எனக்கு பிடிக்கவில்லை..” எனக் கூற ஆரம்பிக்கும் பொழுது பொங்கிய திவாகரன் பார்வதிக்காக சண்டை போட ஆரம்பிக்கிறார்.
அதன் பின்னர், கடுப்பில் அமர்ந்திருந்த வினோத், என்னை தானே பிடிக்கவில்லை என கூறினீர்கள் என திவாகரனிடம் சண்டைக்கு செல்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |