சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு?
பிக்பாஸ் வீட்டிற்குள் பல கனவுகளுடன் வந்த பெண் போட்டியாளர் ஒருவர் இன்றைய தினம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் வேளையில், டைட்டில் வின்னர் பரிசு தொகை விவரங்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது. சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.
அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அதிகமான போட்டியாளர்களால் பார்வதி நாமினேஷன் செய்யப்பட்டார்.
அதன் பின்னர், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன், சபரி, அரோரா, எஃப் ஜே, அப்சரா, ரம்யா ஜோ, கெமி என மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டார்கள்.
எலிமினேஷன் சமயத்தில் வெளியான தகவல்
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அப்சரா குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். பட்டு வேட்டிச்சட்டையில் வந்த விஜய் சேதுபதி, “இன்றைய தினம் வெளியேறும் நபர் தீபாவளியை வீட்டில் கொண்டாடலாம்..” எனக் கூறியவுடன் நாமினேஷனில் இருப்பவர்கள் உஷாராகி விட்டனர்.
நாமினேஷனில் உள்ள போட்டியாளர்களில் அப்சரா கொடுத்த ரியாக்ஷன் அவர் தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கடந்த சீசன்களில் 100 நாட்கள் கடந்து பிக்பாஸ் வீட்டில் விளையாடும் அந்தவொரு போட்டியாளருக்கு டைட்டில் வின்னர் பட்டத்தையும் ரூ. 60 லட்சம் பணத்தை பரிசுத் தொகை வழங்கி வந்தார்கள். அதே போன்று இந்த சீசனில் டைட்டில் வின்னராகும் போட்டியாளருக்கு பரிசுத்தொகையாக ரூ.1 கோடி வரை ரொக்கமாக கொடுக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |