பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் முகம்சுழிக்கும் விதமாக நடந்து கொண்ட வனிதா: பரபரப்பு உண்மையை கூறிய நடுவர் நகுல்
பிரபல ரிவியில் நடைபெறும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர்களை வனிதா தகாத வார்த்தையில் பேசியதாக நகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல ரிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியேறியதோடு, இதற்கு காரணம் ரம்யா கிருஷணன் தான் காரணம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் இருந்து வரும் நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக சமீபத்தில் நிறுத்தப்பட்டு பின்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சமீபத்தில் வனிதா அம்மன் வேடம் அணிந்து நடனமாடினார். இதுபற்றி ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் விமர்சித்தது பிடிக்காமல் ஷோவிலிருந்தே வெளியேறினார்.
இந்த சர்ச்சை பற்றி ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டால் அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறி ஒதுங்கிய நிலையில், நடுவராக இருக்கும் நடிகர் நகுல் சில உண்மைகளைக் கூறியுள்ளார்.
"இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் சொன்னோம். ஆனால் வனிதா தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மா அமர்ந்துகொண்டு இருந்தார், அதனால் அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜி அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். போட்டியில் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்."
"நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்".
"அவங்களை பற்றி பேசவே நான் விரும்பவில்லை, சேற்றில் குதித்து நான் என்னை அசிங்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை" என நகுல் கூறி உள்ளார்.
You May Like This Video