பிபி ஜோடியின் இறுதிமேடையில் கதறி அழுத தாமரை! அடுத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா?
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை கிராண்ட் பினாலேயில் கதறி அழுதுள்ள காட்சி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
பிக்பாஸ் ஜோடிகள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சில பிரபலங்கள் ஜோடியாக கலந்துகொண்டு போட்டியிடும் நிகழ்ச்சியே பிபி ஜோடிகள்.
இந்த நிகழ்ச்சியில் தாமரை மற்றும் சுஜா வருணி, ஆரத்தி இவர்கள் அவரவர் கணவர்களுடனும், ஐக்கி பெர்ரி தனது காதலருடனும் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.
ரம்யாகிருஷ்ணன் நடுவராக இருக்கும் இந்நிகழ்ச்சியினை பிரியங்கா மற்றம் ராஜு இருவரும் தொகுத்து வழங்குகின்றனர்.

கணவருடன் தாமரை
இந்நிகழ்ச்சியில் தாமரை தனது கணவருடன் நடனமாடி வருகின்றார். ஜவுளி கடையில் வேலை செய்த பார்த்த சாரதி இன்று பல மக்களின் மக்களை கொள்ளை கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. ஆனால் இதன் வெற்றியாளர்களின் விபரம் முன்னரே வெளியாகியது. அனல்பறக்க நடனமாடி வரும் பாவனி அமீர் வெற்றியாளர் என்று கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தாமரையின் குடும்பம் மேடைக்கு வந்துள்ளது. தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்ற பின்பு மக்கள் தன்னை எவ்வாறு பார்க்கின்றனர் என்றும் தன்னால் முடிந்த 10 பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.