கணவனை இழந்த பெண்களை குறி வைக்கிறாரா? மாதம்பட்டி ரங்கராஜை விளாசிய பயில்வான்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? என்பது குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பயில்வான் உடைத்த ரகசியம்
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்தது குறித்து பயில்வான் பேசுகையில், “மாதம்பட்டி ரங்கராஜ் பாடி டிமாண்ட் கிங். அவர் விவாகரத்தாகி அல்லது கணவனை விட்டு பிரிந்த நடிகைகள் மீது தான் ஆர்வமாக இருப்பார். அவர்களுடன் டேட்டிங் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதற்கு முன்னர் மூன்று நடிகைகளுடன் லிவ்விங் டூகெதரில் வாழ்ந்துள்ளார். இப்படியான வேலைகளை திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னரும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்து வந்தார்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்திகளை பார்க்கும் பொழுது,“மாதம்பட்டி ரங்கராஜ் உண்மையில் எப்படியானவர்..” என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |