மச்சான் இறந்த 30 நாளில் தந்தை மரணம்: பிரபல நடிகர் பால சரவணன் வீட்டில் சோகம்
பிரபல நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன்(60) கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பால சரவணன். இவரது தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன்(60) சமீபத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த மாதம் இவரது தங்கையின் கணவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது தனது ட்விட்டர் பக்க்கத்தில், “அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவனமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீர்” என்று இத்தகவலை தெரிவித்துள்ளதோடு முகக்கவசம் அணியவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.