பாலாவின் மனைவிக்கு அரசியல் பிரபலத்தின் மகனுடன் தொடர்பு? பரபரப்பை கிளப்பிய பிரபலம்
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் அவர் பிரிவுக்கு பல்வேறு சர்ச்சைக்குரிய காரணங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.
இந்த நிலையில் பாலா மற்றும் இலங்கையை சேர்ந்தவரான நடிகை பூஜா குறித்த தகவல் ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா பேசி இருக்கிறார்.
படத்தில் நடித்த போதே பாலாவிற்கும் பூஜாவிற்கும் ஒரு கெமிஸ்ட்ரி உண்டானது. ஆனால், அந்த படத்தில் ஆர்யா நடித்ததால் அது அப்படியே மறைந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.

அதே போல நிகழ்ச்சி ஒன்றில் பாலா மற்றும் பூஜா இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டனர் என்றும் கூறியுள்ளார். விவாகரத்தில் மனைவியை பிரிவதாக பாலா அறிவித்த நிலையில் இந்த தகவலை ரசிகர்கள் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
அபிராமியை விட நிரூப் இத்தனை வயது சிறியவரா? காதல் மலர்ந்தது எப்படி
பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன்
அதே போல பாலாவின் விவாகரத்து குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
அதாவது,
பாலாவின் மனைவி கல்லூரியில் படிக்கும்போதே அதிமுக முன்னணி தலைவரின் மகன் ஒருவருடன் நட்பாக பழகியதாகவும், பின் அது காதலாக மாறியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், முத்து மலரின் அப்பாவிற்கு பாலாவை பிடித்துப்போனதால் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
பின் முத்து மலர், தன்னுடைய கணவன் சரியாக இல்லாத காரணத்தினால் மனசு தடுமாறினார். தன்னுடைய பழைய காதலன் அதாவது அதிமுக முன்னணி தலைவரின் மகன் உடன் வெளிநாடு சுற்றுலா சென்றார். இது குறித்து பல கிசுகிசுக்கள் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதற்காக பஞ்சாயத்தும் நடந்தது. அதில் முத்து மலர் நான் இனிமேல் பாலாவுடன் வாழ மாட்டேன் என்று கூறினார். பாலாவும், எனக்கு முத்து மலருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம்.
4 வருடங்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இரண்டு பேரும் பிரிந்து விட்டார்களாம்.