பக்தி சூப்பர் சிங்கரில் பாடலை மறந்து கண்ணீர் விட்ட அபிராமி.. நடுவர் சொன்ன வார்த்தை
வழக்கமாக தன்னுடைய காந்த குரலால் பாடல் பாடி அரங்கத்தையே அருளில் முழ்கச் செய்யும் தேவகோட்டை அபிராமி பாடலை மறந்து தவித்த சம்பவம் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
பாடலை மறந்து தவிக்கும் அபிராமி
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள்.
அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.
அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் முருகன் பக்தி பாடல்கள் சுற்று சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் பாடிய தேவகோட்டை அபிராமி இடையில் பாடலை மறந்தும் அழும் காட்சி நடுவர்கள் உட்பட முழு அரங்கத்தையும் கவலையடையச் செய்துள்ளது.
நடுவரில் ஒருவர் பாடு பாடு என கத்த, அபிராமியால் அடுத்த வரியை கூட சரியாக பாட முடியவில்லை. இதனால் கண்ணீருடன் மேடையில் இருந்து சென்றுள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |