பக்தி சூப்பர் சிங்கர் உயிரை கொடுத்து பாடிய பெண்- நடுவரில் ஒருவர் கொடுத்த வாய்ப்பு
பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உயிரை கொடுத்து பாடிய பெண்ணிற்கு நடுவர்களுக்கு கூறிய வார்த்தை மேடையிலேயே கண்கலங்க வைத்துள்ளது.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
நடுவர்கள் கூறிய அந்த வார்த்தை
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.
அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும், “legends hits round" நடக்கவுள்ளது. அதில் அருணா தங்கை கலந்து கொண்டு தன்னுடைய உயிரை கொடுத்து பாடியிருந்தார். அவருக்கு இணையாக வெளி மாநிலத்தில் இருந்து வந்த இளம் பெண்ணொருவர் பாடியது நடுவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுவர்கள் வாழ்த்தியதும் என்ன செய்வது என தெரியாமல் குறித்த பெண், அந்த மேடையிலேயே அழ ஆரம்பித்து விட்டார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |