பாகுபலியாக மாறிய குழந்தை செய்த காரியம்: 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி
குழந்தை ஒன்று பாகுபலி பாணியில் செய்த காரியம் காணொளியாக வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கு கவலைக்கு இடமே இருப்பதில்லை. ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு விடுவார்கள்.
அவ்வாறே தற்போது குழந்தை ஒன்றின் செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நாற்காலி ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அக்காவின் நாற்காலிக்கு அடியில் அமர்ந்திருந்த குழந்தை, கஷ்டப்பட்டு எழுந்ததுடன், பின்பு அக்கா அமர்ந்திருந்த நாற்காலியை பாகுபாலி பாணியில் நகர்த்து கொண்டு சென்றுள்ளார்.
இந்த கொள்ளை அழகு காட்சி காண்பவர்களை சிரிக்க வைத்ததோடு, ரசிக்கவும் செய்துள்ளது.