கை வைத்தாலே தலைமுடி கொட்டுதா? இந்த பொருளை இரு தடவை போட்டால் போதும்
தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான்.
முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
இதற்கு வீட்டு வைத்தியம் இருக்க பல கெமிக்கல் பொருட்களின் பெறுபேற்றை அனைவரும் தேடி செல்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது அழகை மங்கச்செய்யும்.
இந்த முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக பாதாம் பிசின் உள்ளது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்விற்கு பாதாம் பிசின்
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது 10 துண்டுகள் பாதாம் பிசினை எடுத்து அதை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு நாள் இரவு முழுக்க ஊற வேண்டும்.
பின்னர் மறு நாள் காலையில் அதை எடுத்து தலைக்கு தேவையான அளவு பாதாம் பிசினை எடுத்து அதை நன்றாக மிக்ஸி ஒன்றில் அரைத்துக்கொள்ள வேண்டும். மீதமாக இருககும் பாதாம் பிசினை நீங்கள் குளிரூட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
பின்னர் இந்த அரைத்த பாதாம் பிசினுடன் நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றை சேர்க்க வேண்டும். இது ஒரு ஹேர் பெக்காக தயாராகி விடும்.
வாழைப்பழத்தில் அதிக அளவில் உயிர் சத்துக்கள் இருக்கின்றன. இந்த உயிர் சத்துக்கள் நம்முடைய தலைமுடியை உறுதியாக மாற்றுவதோடு தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
பின்னர் தயார் செய்து வைத்திருக்கும் வாழைப்பழ பாதாம் பிசின் கலவையுன் நீங்கள் என்ன எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவீர்களோ அதை இரண்டு ஸ்பூன் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதை மறுபடியும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது தலைய்க்கு தேவையான ஹேர் பெக் தயாராகி விடும்.
இதை நம் தலையில் வேர்க்கால்களில் படும் படி தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எப்போதும் போல ஷாம்பூ போட்டு நன்றாக சாதாரண நீரில் குளித்து விட வேண்டும். அவ்வளவு தான் இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் எப்படி வேகமாக கொட்டிய முடியும் தடைபடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |