மனித முகத்தோடு பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! பூஜை செய்யும் கிராம மக்கள்.... பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ
குஜராத்தில் மனித முகத்தோடு பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் பூஜை செய்து வணங்கி வரும் புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குஜராத்தின் சோங்கத் தாலுகாவில் ஆற்றின் கரையில் உள்ள செல்டிபாடா கிராமத்தில் ஆடு ஒன்று குட்டி போட்டுள்ளது. பிறந்தவுடன் குட்டி ஆட்டை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மற்ற ஆடுகளை போல் அல்லாமல் நான்கு கால்களையும், காதுகளையும் கொண்டிருந்தது, இருப்பினும், அதன் உடல் பாகங்கள் மீதமுள்ளவை மனிதனின் உடலை ஒத்திருந்தன.
அஜய்பாய் வாசவா என்ற விவசாயியின் வீட்டில் ஆடு பிறந்ததாகக் கூறப்படுகிறது.
ஆட்டுக்கு வால் இல்லை. குட்டி ஆடு பிறந்த சில மணி நேரங்களில் இறந்த போதிலும் அசாதாரணமாக பிறந்த ஆட்டுக்குட்டியின் வீடியோக்களும் ,படங்களும் இணையவாசிகள் இடையே வைரலாக பேசப்பட்டு வருகின்றது.