போர் மட்டுமில்லை - பாபா வங்காவின் இந்த கணிப்பும் பலிக்குமா? அச்சத்தில் மக்கள்
பாபா வங்காவின் பகீர் கணிப்புகள் நடந்துகொண்டிருப்பதை தொடர்ந்து அவருடைய இன்னும் சில கணிப்புக்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாபா வங்கா
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது. இன்னும் நடக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். அதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நடந்துகொண்டிருக்கும் கணிப்புகள்
பாபா வங்கா உலக நாடுகளுக்கிடையில் போர் உருவாகும் இதனால் பஞ்சம் பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என கணித்திருந்தார்.
அவர் கணித்தது போலவே இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது பெரிதளவில் இன்னும் வரவில்லை.
மேலும் அமெரிக்கா , இஸ்ரேல், ஈரான் போரில் கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் தீரா வெறியோடு பழிவாங்க காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த போர் முடிவிற்கு வந்தால் தான் மக்களின் பாதி பிரச்சனை சரியாகும்.
பாபா வங்கா 2026ம் ஆண்டு ஒரு போரின் ஆண்டாக இருக்கும் உலகின் கிழக்கு பகுதியில் ஒரு போர் வெடிக்கும் இதனால் உலக நாடுகள் பிரச்சனைக்கு உள்ளாகும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் கூறியது போல 2026 ஆன இந்த ஆண்டில் போர் தொடங்கி தற்போது அதனால் மற்றைய நாடுகளும் பல பிரச்சனைக்குள்ளாகி வருகின்றது.

நடக்கப்போகும் கணிப்புகள்
இதில் அவர் மேலும் சில கணிப்புக்களை கணித்துள்ளார். அதாவது மார்ச்-ஏப்ரல் 2026 இல் ஒரு பயங்கரமான போர் நடக்கக்கூடும், இதில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்து போரிடும்.
இந்தப் போரினால், உலகின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். ஐரோப்பா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். போர் தொடங்கியவுடன் ஐரோப்பா நிலமே அழியும். ரஷ்யா ஒரு வல்லரசு நாடாக மாறும் என அவர் பகிர் கணிப்புக்களை கணித்துள்ளார்.
இவரது பல கணிப்புக்கள் தற்போது வரை துல்லியமாக நடக்கப்பட்டதால் இந்த போர் நீடித்து தற்போது கூறப்பட்ட கணிப்புக்களும் பலிக்குமா என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |