Baakiyalakshmi: புதிய ஹோட்டலில் அரங்கேறிய சண்டை... கைது செய்யப்பட்ட செழியன்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் புதிய ஹோட்டலில் செழியனுக்கும், கவுன்சிலருக்கும் சண்டை ஏற்பட்டு, இறுதியில் செழியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுதாகர் களமிறங்கி ஹோட்டலை அபகரித்துள்ளார்.
பாக்கியா மீண்டும் புதிய ஹோட்டலை ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு கவுன்சிலர் பிரச்சனை செய்து வருகின்றார். கடைசியில் செழியன் கவுன்சிலரை அடித்துள்ளார்.
இதனால் போலிசார் செழியனை கைது செய்து சென்றுள்ளனர். இந்த பிரச்சனையிலிருந்தும் பாக்கியா எவ்வாறு மீண்டு வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |