இனியாவை பாடாய்படுத்தும் ரித்திஷ்- துயரம் தாங்க முடியாமல் அம்மா வீட்டுக்கு போன மகள்.. கடுப்பில் மாமனார்
வேலை முடிந்தவுடன் வீடு திரும்பிய இனியாவுக்கு மாப்பிள்ளை பார்த்த வேலை சின்னத்திரை ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில், தற்போது இனியாவை நித்தேஷுக்கு சுதாகர் வைத்து, இரண்டு ஹோட்டல்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
கட்டுக்கதைகளை அடுக்கிச் செல்லும், சுதாகர் குடும்பத்தினருக்கு இனியா சரியான பாடம் கொடுப்பார் என எதிர்ப்பார்த்த வேளையில், இனியாவின் காதல் விவாகரம் கணவருக்கு தெரியவந்துள்ளது.
இனியா பாக்கியாவை பார்ப்பதாக கூறி, கள்ளத்தனமாக காதலனை பார்க்கிறார் என ரித்தீஷ் பழி போடுகிறார்.
இனியாவை பாடாய்படுத்தும் ரித்திஷ்
இந்த நிலையில், இனியாவுக்கு நடக்கும் கொடுமைகளை தெரிந்து கொண்ட கோபி- பாக்கியா இருவரும் சுதாகரிடம் சென்று நடந்த விடயம் குறித்து விசாரிக்கிறார்கள். அப்போது கடுப்பான மாப்பிள்ளை, இனியா மீதுள்ள தவறுகளை மாத்திரம் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இதனை தொடர்ந்து வேலைக்கு செல்ல முடிவுச் செய்து வீட்டிலுள்ளவர்களிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு மாமனார் மாத்திரம் ஆறுதலாக இருந்து வேலைக்கு அனுப்புகிறார்.
வேலைக்குச் சென்ற இனியா இரவில் வீட்டுக்கு வந்த போது ரித்திஷ் கதவை திறக்காமல் இனியாவை வெளியில் நிற்க வைக்கிறார். அதனால் வேறு வழியில்லாமல் இனியா வண்டியை வரவழைத்து பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.
இந்த விடயம் தெரியாமல் இனியாவை காணவில்லை என கடுப்பான மாமனார், “ ஏன் எங்களிடம் கூறாமல் உங்கள் வீட்டுக்கு வந்தார்..”என கோபியிடம் கோல் செய்து கேட்கிறார். அதற்கு கோபி,“இனியா சொல்லாத விடயம் எங்களுக்கு தெரியாது. காலையில் வந்து விடுவாள்..” என்கிறார்.
கோலை வைத்து விட்டு, மகளிடம் இது குறித்து கேட்கலாம் என சென்ற கோபிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாக்கியா மகளுடன் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் பேசலாம் என கோபி அவருடைய வீட்டிற்கு செல்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |