பாக்கியாவின் கனவுகளை நொறுக்கும் சம்பந்தி- மாமனார் முடிவால் சிக்கலாகும் இனியா வாழ்க்கை
பாக்கியாவின் ஹோட்டல் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு இனியாவின் மாமனார் புதிய திட்டங்களை அடுத்தடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில், சுஜித்திரா கதாநாயகியாக நடித்து வருகிறார். கணவர் இல்லாமல் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு இவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். இன்றும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கடைசியாக இனியாவையும் திருமணம் செய்து கொடுத்த பாக்கியா நிம்மதியாக இருக்கலாம் என எதிர்பார்த்த பொழுது, இனியாவின் மாமனார் புது பிரச்சினையாக வந்துள்ளார்.
பாக்கியாவின் ஹோட்டலை கனவை எப்படியாவது இல்லாமலாக்கி விட வேண்டும் என பாரிய திட்டங்களை போட்டு வருகிறார்.
மாமனாரை எதிர்க்கும் இனியா
இந்த நிலையில், தன்னுடைய திருமணத்திற்காக தான் என்னுடைய அம்மா ஹோட்டல்களை விட்டுக் கொடுத்திருக்கிறார் என்ற விடயம் இனியாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் வீட்டில் கணவர் மற்றும் அவருடைய அம்மா, அப்பா இருவருடனும் தினமும் ஏதாவது பிரச்சினை போட்டுக் கொண்டே இருக்கிறார்.
கணவருடம், “அப்பாவின் பேச்சுக்கு பதில் பேசக்கூடாது..” என கட்டுபாடுகள் எல்லாம் போடுகிறார். இப்படியொரு சமயத்தில் உண்மையை தெரிந்து கொண்ட கோபி, பாக்கியாவிற்காக சம்பந்தியிடம் சென்று பேசுகிறார். ஆனால் அவர், சிறிய ஹோட்டலையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கிறார். பதில் கூற முடியாமல் கோபி எழுந்து வருகிறார்.
இனியாவும் தன்னால் அம்மாவின் கனவுகள் மறைந்து விடக்கூடாது என நினைத்து, பாரிய போராட்டங்களை அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கிறார். அழுதுக் கொண்டே இனியாவின் ஹோட்டலுக்கு இனியா வரும், பொழுது பாக்கியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |