கோபியின் வீட்டில் ராதிகாவின் கணவர்! அம்பலமாகிய உண்மை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உண்மை தெரியும்படியாக ப்ரொமோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. குடும்ப பெண்களை மிகவும் அதிகமாக ரசிகைகளாக பெற்றுள்ள இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கதைகளம் அமைக்கபப்பட்டுள்ளது.
கோபியின் வீட்டில் ராதிகா கணவர்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் கோபியின் வீட்டிற்கு ராதிகாவின் கணவர் வந்துள்ள நிலையில், அவரைப் பார்த்ததும், பாக்கியாவின் மாமனார் கோபமாக வெளியே போகுமாறு கூறுகின்றார்.
தனது குடும்பத்தில் உங்க மகனுக்கு என்ன வேலை? என்று ராதிகாவின் கணவர் கேட்க கோபியின் அம்மா மகனுக்காக பேசுகின்றார்.
இறுதியில் எழில் அவரை அழைத்துக்கொண்டு வெளியே வர எழிலிடம் ராதிகாவின் கணவர், காணொளி ஒன்றினை காண்பித்த நிலையில் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளார்.