நா ரொம்பவே அழுதேன்.. மேடையில் மூச்சடைக்க பேசிய இனியா- இறுதியில் கூறிய அந்தவொரு வார்த்தை
“நா ரொம்பவே அழுதேன்..” என மேடையில் பாக்கியலட்சுமி இனியா பேசியது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் கோபிக்கு தெரியவந்துள்ளது. உடனே வீட்டில் உள்ள அனைவரிடமும் அம்பலப்படுத்தியுள்ளார். அத்தருணத்தில் விடயம் அறியாத செல்வி வீட்டிற்கு வரவே வீட்டில் உள்ள அனைவரும் செல்வியை வெளியே செல்லுமாறு துரத்தியுள்ளனர். ஆனால் பாக்கியா செல்வியை எதுவும் கூறாமல் பிரச்சினைக்கு சுகுகமான தீர்வொன்றை கொண்டு வந்துள்ளார்.
நான் ரொம்பவே அழுதேன்..
இந்த விடயம் தெரியாமல் செழியன்-கோபி இருவரும் ஆகாஷை அடித்து, மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இனியா என்ன செய்வது என தெரியாமல் நிற்கிறார்.
சீரியல் இப்படி ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருந்தாலும் பாக்கியலட்சுமியில் கதைக்காக எடுக்கப்பட்ட நடன காட்சி இணையவாசிகள் மத்தியில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டன. அதில் நடித்த இனியா என்கிற நேஹா மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளார்.
இதனை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது தனக்கு ஆடத் தெரியும் என்பதனை உறுதிச் செய்த பின்னர் மூச்சடிக்க கூறியுள்ளார். இதனை கேட்ட தொகுப்பாளர்கள் உட்பட ரசிகர்களும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.
அத்துடன் அதில் பேசிய இனியா, “எனக்கு ட்ரோல் செய்த பின்னர் மிகவும் வறுத்தமாக இருந்தது. என்னையேவே எனக்கு பிடிக்காத நிலையும் வந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டெழுந்து விட்டேன். தற்போது நலமாக இருக்கிறேன்..” என பேசியுள்ளார்.
இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. இதனை பார்த்த ஆதரவாளர்கள்,“ எல்லாம் நன்மைக்கே..”எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |