Baakiyalakshmi: பணத்தால் ஆட்டம் போடும் சுதாகர்... மீடியாவிற்கு செல்லும் இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் சுதாகர் குடும்பத்தினரை சந்தித்து இனியா மீடியாவிற்கு செல்வதாக கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
கோபி தற்போது பாக்கியாவுடன் இருந்து வரும் நிலையில், இனியாவிற்கு செய்து வைத்துள்ள திருமணம் தற்போது பிரச்சனையாகியுள்ளது.
கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையான விடயத்தை அறிந்த இனியா தற்போது அம்மா வீட்டில் வசித்து வருகின்றார். மேலும் அவரிடமிருந்து விவாகரத்து பெறவும் முயற்சித்து வருகின்றார்.
ஆனால் என்னதான் போலிஸாரிடம் புகார் அளித்தாலும் தனது பணத்தை வைத்து சுதாகர் எஸ்கேப் ஆகி வருகின்றார். இந்நிலையில் தான் மீடியாவிற்கு செல்வதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |