Baakiyalakshmi: மிரட்டிய கணவருக்கு இனியா கொடுத்த சரியான பதிலடி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மாமனார் மாமியாருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கணவர் அவரை மிரட்டியதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்த்துள்ளார்.
இதற்கிடையே பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஹோட்டல் தொழிலிலும் கொடிகட்டி பறக்கின்றார். இதற்கு இடையூறாக சுதாகர் வந்து பாக்கியா ஹோட்டலை அபகரித்த நிலையில், அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளார்.
பாக்கியாவிற்கு உதவியாக கோபி இருக்கும் நிலையில், தற்போது இனியா வீட்டில் அவருக்கு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது இனியாவின் கணவர், தனது தாய் தந்தைக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று இனியாவை மிரட்டியுள்ளார்.
இதற்கு இனியா அவர்களின் தவறையும் சுட்டிக் காட்டி சரியான பதிலடியும் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |