Baakiyalakshmi: இனியா திருமணத்தால் மகிழ்ச்சியில் குடும்பம்... பாக்கியா எடுக்கும் முடிவு என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் வரவேற்பு நிகழ்ச்சியில் இனியா நிற்கும் நிலையில், பாக்கியா தனது மகளுக்காக எடுக்க இருக்கும் முடிவை குறித்து யோசித்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாகும்.
இனியா பாக்கியாவின் தோழி செல்வியின் மகனைக் காதலித்து வந்த நிலையில், இந்த விடயம் வீட்டில் அனைவருக்கும் தெரிந்து பூதாகரமாக வெடித்தது.
இதன் காரணமாக ஈஸ்வரி கோபி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தொழிலதிபர் சுதாகர் பாக்கியாவின் ஹோட்டலை கைப்பற்ற இந்த திருமணத்தினை நடத்த முடிவு செய்துள்ளார்.
பாக்கியா தனது ஹோட்டலை கொடுப்பதற்கு யோசனை செய்துவரும் நிலையில், இனியாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை அவதானித்து, ஹோட்டலை கொடுக்கும் முடிவிற்கு வந்துள்ளார்.
உண்மையிலேயே பாக்கியா தனது ஹோட்டலை சுதாகரிடம் கொடுத்துவிடுவாரா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |