Baakiyalakshmi: பிறந்தநாளில் அம்பலமாகிய கணவரின் உண்மை! பேரதிர்ச்சியில் இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற உண்மை இனியாவிற்கு தெரியவந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
ஆனால் தற்போது கோபி மனம் மாறி பாக்கியாவுடன் சமாதானமாக இருந்து வருகின்றார். தற்போது இனியா அலுவலகத்திற்கு சென்ற நிலையில், அங்கு போதை பொருள் பயன்படுத்திய வழக்கு குறித்து பேசியுள்ளார்.
அப்பொழுது சுதாகர் மகன் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது இனியாவிற்கு தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு வந்த இனியா தனது தந்தையை அழைத்து குறித்த உண்மையை கூறி அழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |