Baakiyalakshmi: கோபிக்கு இவ்வளவு அழகான குரலா? மெய்மறந்து நின்ற பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாடுவதைக் கேட்ட பாக்கியா ஆச்சரியத்தில் உறைந்து நிற்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
ஆனால் தற்போது பாக்கியாவின் கணவர் கோபி பாக்கியாவுடன் இருந்து வருகின்றார். இனியாவிற்கு திருமணம் செய்து வைத்த வீட்டினால் பாக்கியா அடுத்தடுத்த சோதனைகளை சந்தித்துள்ளார்.
கோபி பாக்கியாவை முற்றிலும் வெறுத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் மீது அதிக அக்கறை காட்டி வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியாவின் ஹோட்டலுக்கு கிட்டாருடன் வந்த கோபி பாடல் ஒன்றினைப் பாடி அசத்தியுள்ளார். கோபியின் பாடலை முதன்முறையாக கேட்ட பாக்கியா மெய்மறந்து ஆச்சரியத்தில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |