Baakiyalakshmi: இனியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடு... திகைப்பில் பாக்கியா! ஆனால் நடந்த டுவிஸ்ட்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்கு திடீரென திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் கோபி மற்றும் ஈஸ்வரி.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
தற்போது இனியாவின் காதல் விவாகாரம் வீட்டில் பூதாகரத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வி பாக்கியாவிற்காக பொறுத்து போயுள்ள நிலையில், வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் இனியாவிற்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். திடீரென நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை வீட்டாரை வரவழைத்துள்ளனர்.
இதற்கு பாக்கியா மறுப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால் இனியா சாமர்த்தியமாக இஷ்டமில்லாமல் திருமண ஏற்பாடு செய்வதாக பொலிசிற்கு புகார் அளித்துள்ளார்.
திருமண நிச்சயதார்த்தை பொலிஸ் வந்து நிறுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இனியா இயல்பான நிலையில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |