Baakiyalakshmi: ஒரு வழியாக செழியனை மீட்ட பாக்கியா! பரபரப்பான ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் கவுன்சிலரை செழியன் அடித்துள்ள நிலையில், தற்போது காவல்நிலையத்தில் இருப்பவரை பாக்கியா காப்பாற்றியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுதாகர் களமிறங்கி ஹோட்டலை அபகரித்துள்ளார்.
பாக்கியா மீண்டும் புதிய ஹோட்டலை ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு பிரச்சனை செய்த கவுன்சிலரை செழியன் அடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மீட்பதற்கு போராடி வந்த பாக்கியாவிற்கு அமைச்சர் உதவி செய்துள்ளார். மேலும் பாக்கியாவின் சமையலையும் பாராட்டியுள்ளார்.
இதனால் பாக்கியா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |