Baakiyalakshmi: பாக்கியா வாங்கிய சத்தியம்... ஆகாஷ், இனியா என்ன செய்யப்போகிறார்கள்?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியா, ஆகாஷ் இருவரிடமும் சத்தியம் வாங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
தற்போது இனியாவின் காதல் விவாகாரம் வீட்டில் பூதாகரத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வியின் மகனை இனியா காதலித்து வரும் நிலையில், இது கோபி மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாக்கியா இனியா மற்றும் ஆகாஷிடம் சென்று சத்தியம் வாங்கியுள்ளார். இருவரின் வயதை கருத்தில் கொண்டு குறித்த சத்தியத்தினை வாங்கியுள்ளார்.
இதற்கிடையே செழியன் சென்று ஆகாஷை அடிக்கும் காட்சியும் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. இதனால் கோபியை பாக்கியா வீட்டை விட்டும் வெளியேறுமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |