ஆட்டோவில் சென்ற அழகான பெண்: நடுஇரவில் இருட்டில் நின்ற ஆட்டோ! பின்பு நடந்த துயரம்
ஆட்டோவில் சென்ற பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, சக ஆட்டோ சாரதியுடன் கூட்டு வன்கொடுமை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் ஒரு 20 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு ஆட்டோவில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் ஆட்டோ சாரதி மற்ற ஆட்டோ சாரதிகளுக்கு போன் செய்து வரக் கோரியுள்ளார். பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, ஆட்டோ ரிப்பேர் என்று பெண்ணிடம் கூறியுள்ளனர்.
அதற்குள் மற்ற ஆட்டோ டிரைவர்களும் வந்த குறித்த பெண்ணை சுற்றி வளைத்து, ஆட்டோவில் வைத்து கூட்டு வன்கொடுமை செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.
பின்பு குறித்த பெண் காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமையினைக் கூறி புகார் அளித்துள்ளார். அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.