8 ஆண்டுகள் உறவு இது... இறந்து போன காதலன் மூலம் குழந்தை பெற்ற காதலி... எப்படி சாத்தியம்?
ஆஸ்திரேலியாவில் இறந்து போன காதலனின் உடலிலிருந்து விந்தணுவை பெற்று அதன் மூலம் காதலி கர்ப்பமான விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அலெக்ஸ் புல்லின், இவர் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்.
இவர் 2 முறை ஸ்னோபோர்டு சாம்பியன்சிப் பட்டத்தை பெற்றவர் இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியானின் கோல்டு கோஸ்ட் என் அழைக்கப்படும் இடத்தில் நீருக்குள் சென்று மீன் பிடிக்கும் வீரவிளையாட்டின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டார்.
இவர் இறப்பதற்கு முன்பு எல்லிடி விலக் என்ற பெண்ணுடன் 8 ஆண்டுகளாக உறவில் இருந்தார்.
அவர்கள் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தனர்.
ஆனால் அலெக்ஸ் இறக்கும் வரை அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இந்நிலையில் அலெக்ஸ் இறந்த போது மருத்துவரை அணுகிய எல்லிடி தனக்கு இறந்து போன அலெக்ஸின் விந்தணு மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா என கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் இறந்த 36 மணி நேரத்திற்குள் அவரது விந்தணுவை எடுத்தால் செயற்கை முறையில் கருவுற வைக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன் படி எல்லிடியும் கருவுற்றார். இது குறித்து அவர் கூறும் போது: "நானும் அலெக்ஸூம் நீண்ட நாட்களாக குழந்தை பெற்றுக்கொள்ள முயன்று கொண்டிருந்தோம்.
இது எங்களுடன் நெருங்கி பழங்கிய அத்தனை பேருக்கும் தெரியும். அலெக்ஸ் இறந்தவுடன் டாக்டர்களிடம் நான் விசாரித்த போது இறந்தவர்களின் விந்தணு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதை என்னிடம் சொன்னார்கள் அதற்கு குயின்லேண்ட்டின் சட்டத்திலும் இடம் இருந்தது. இதனால் சட்டப்படி எல்லாம் செய்து தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்.
வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என கூறியுள்ளார்.